பெண் வன்கொடுமை சட்டத்தில் நீட் 'அனிதாவின்' அண்ணன் அதிரடி கைது!

Update: 2022-02-17 11:50 GMT

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனிதா. இவர் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இவரது சகோதரர் அருண்குமார், கணவன் மனைவியிடம் தகராறு செய்த காரணத்தினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ளது குழுமூர் பெரியார் என்ற நகர். அங்கு செந்தில், வசந்தி என்ற தம்பதிகள் வசித்து வருகின்றது. அதே பகுதியில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்தாரும் வசித்து வருகின்றனர்.

இதனிடையே வீட்டின் முன்பாக வசந்தி நின்று கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது அனிதாவின் இரண்டாவது அண்ணன் அருண்குமார், டூ வீலரை மிக வேகமாக ஓட்டி அச்சுறுத்தியுள்ளார். இது குறித்து வசந்தி தனது கணவர் செந்திலிடம் தகவலை கூறியுள்ளார். இது தொடர்பாக அனிதாவின் அண்ணனிடம் செந்தில் கேள்வி கேட்டுள்ளார்.

அப்போது செந்தில் மற்றும் வசந்தி இருவரையும் அருண்குமார் சராமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வசந்தி காவல்துறையிடம் அளித்த புகாரின் பேரில் பெண் வன்கொடுமை சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் அருண்குமாரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source, Image Courtesy: Thanthi TV

Tags:    

Similar News