வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பெறும் புதிய நன்மைகள்! முது பெரும் தமிழக விவசாயி மகாதானபுரம் ராஜாராம் தகவல்கள்.!
வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பெறும் புதிய நன்மைகள்! முது பெரும் தமிழக விவசாயி மகாதானபுரம் ராஜாராம் தகவல்கள்.!
அவர்கூறிய நல்ல தகவல்கள்: எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை என்ன வென்றால் உற்பத்தி செய்யபப்டும் பொருள்களுக்கு நல்ல விலை பெறமுடியவில்லை என்பதுதான். இந்த நிலையில் வேளாண் அறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் ஒரு கமிட்டியை அரசு அமைத்து விவசாயிகளின் சிரமங்களை ஆராய்ந்தது.
அதனடிப்படையில் விவசாயிகளுக்கு அவர்கள் உற்பத்தி செலவின் மீது 150 சதவீதம் விலை அல்லது அதற்கு மேல் நிர்ணயம் செய்யலாம் என எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைத்தது.
அதை அரசு ஏற்றுக் கொண்டது, ஆனால் அந்த விலையை உழவர்களுக்குத்தான் கொடுப்போம், அனால் இடைத்தரகர்களுக்கு அதைக் கொடுக்கமாட்டோம் என்று புதிய வேளாண் சட்டம் கூறுகிறது.
இதை எதிர்த்துதான் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து டெல்லி வந்து அரசை எதிர்த்து 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர்வரை கூடியுள்ள இடைத்தரகர்கள் கூட்டம் போராட்டம் நடத்துகிறது. புதிய வேளாண் சட்டங்கள் அனைத்தையும் வாபஸ் பெறவேண்டும் என்ற அவர்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டும்.
அவர்கள் கோதுமை, நெல் மட்டுமே விளைவிக்கிறார்கள், ஆனால் நாங்கள்அனைத்து தானியங்களையும், பழங்களையும் விளைவிக்கிறோம். மற்ற வணிக பயிர்களையும் விளைவிக்கிறோம், எனவே எங்களுக்கு அதிக வருவாய் தேவை, குறிப்பாக ஆரஞ்ச், சணல் போன்ற வணிகப்பயிர்களை விளைவிப்பவர்கள் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுதான் விவசாயம் செய்கிறார்கள்,
இந்நிலையில் அது போன்ற விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை பொருந்தாது, அப்போது கூடுதல் விலைக்கு விற்பதற்காக நிறுவனங்களை தொடர்பு கொள்கிறார்கள், அங்கு வணிகர்கள் ஏமாற்ற முடியாத அளவுக்கு விவசாயிகளுக்கான சட்ட பாதுகாப்பை புதிய வேளாண் சட்டங்கள் அளிக்கின்றன.