கூடுவோம்! கூட்டுவோம்! அண்ணாமலையின் புதிய அறிவிப்பு!

Update: 2023-10-06 03:45 GMT

கூடுவோம் கூட்டுவோம்!....டெல்லி தலைமையிடம் எனது கருத்தை ஆழமாக தெரிவித்து விட்டேன் அதற்கு மேல் தேசிய தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும். 

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மஹாலில் பாஜக நிர்வாகிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார், இனி வரும் அடுத்த ஏழு மாதங்களுக்கு யாருக்கும் ஓய்வு கிடையாது கடினமாக உழைக்க வேண்டும், மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்தவர்களை என் மண் என் மக்கள் நடைபயணத்தில் அழைத்து வந்து பேச வேண்டும்.

அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் கிராமசபை கூட்டங்களை போன்று பாஜக சார்பில் அடுத்து வரும் 15ஆம் தேதியில் "கூடுவோம் கூட்டுவோம்" என்ற கூட்டத்தை கிளைதோறும் கூட்டி மக்களின் பிரச்சனைகளை கையில் எடுப்போம். டெல்லி கூட்டணி முடிவை எடுக்கும் ஆனால் என் கருத்தை ஆழமாக தேசிய தலைமையிடம் கூறிவிட்டேன் என்று கூறினார்.

இதற்கு அடுத்து செய்தியாளர்களை சந்தித்தவர், கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லை என்றாலும் வருத்தப்பட போவதில்லை! என்னுடைய ஒரே நோக்கம் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்துவது. 2024 ஆம் ஆண்டு தேர்தல் என்பது திமுகவிற்கும் பாஜகவிற்கும் தான் போட்டி நிலவும்! மற்ற கட்சிகளுக்கு சக்தி இல்லை என்று அதிரடி கருத்தை பதிவு செய்தார். 

Source - News 7tamil

Similar News