அரசியல் கூட்டணிக்காக நாடகமாடும் தி.மு.க.. பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் காரசார கருத்து..

Update: 2023-10-11 03:00 GMT

அரசியல் கூட்டணிக்காக நாடகமாடும் திமுகவின் துரோக வரலாறு மீண்டும் ஒரு முறை வெளிச்சத்திற்கு வந்து இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையின் போது இது பற்றி அவர் தெளிவாக குறிப்பிட்டு பேசும் பொழுது, பிரதமர் மோடியின் முயற்சியால், 2018ம் ஆண்டு, காவிரி நதி நீர் ஆணையம் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளாக, எந்தப் பிரச்னையும் இல்லாமல், தமிழகத்துக்கு காவிரி நதி நீர் கிடைத்து வந்தது. கர்நாடக மாநிலத்தில், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன், காவிரி நதி நீரைத் திறந்து விடாமல் தமிழக விவசாயிகள் ஒருமனதாக வஞ்சித்து வருகிறது.


கர்நாடக மாநில காங்கிரஸ் அரசைக் கண்டித்து இதுவரையில் ஒரு வார்த்தை கூடப் பேசாத திமுக, சட்டசபையில் மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் என்ற பெயரில் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது. ஏன் நீங்கள் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசை கண்டிக்கவில்லை அவற்றிற்கு எந்த ஒரு கருத்தையும் தற்போது வரை தெரிவிக்காமல் இருக்கிறீர்கள் என்ற கருத்தும் பொதுமக்களிடமும் தற்போது எழுந்து வருகிறது.


தீர்மானத்தின் மீதான சட்டசபை விவாதத்தில், தீர்மானத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி, தமிழக சட்டசபை எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறும் போது, முழுவதுமாகப் பேச விடாமல் குறுக்கீடு செய்வதும், ஒலிபெருக்கியை நிறுத்துவதும், அவரின் கருத்துக்களை மக்களிடத்தில் செல்ல விடாமல் ஒளிபரப்பை தடை செய்வதுமாக, பல்வேறு துரோகங்களை செய்து வருகிறது. திமுகவின் தவறுகளும் மக்களுக்கு இழைத்த துரோகங்களும் எல்லாம் வெளிவந்து விடுமோ என்ற ஒரு அச்சத்தின் காரணமாக தான் தெரிந்து விவசாயிகளின் மீது தமிழக மக்களின் மீது திமுக இத்தகைய பிரச்சனைகளை தூக்கி வைக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News