மறைந்த பங்காரு அடிகளார் மனைவிக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆறுதல்..

Update: 2023-10-24 04:26 GMT

மறைந்த பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி அவர்களை நேரடியாக சந்தித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆறுதல் தெரிவித்து இருக்கிறார்கள். பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய இரங்கல் கடித்ததையும் அவர்கள் நேரடியாக வழங்கி இருக்கிறார்கள்.


இது குறித்து மத்திய அமைச்சர் L.முருகன் அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தளங்கள் பக்கத்தில் இது பற்றி கூறும் பொழுது, ஆன்மீகமும் கருணையும் நிறைந்த தவத்திரு அம்மா பங்காரு அடிகளார் மறைவுக்கு நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எழுதிய இரங்கல் மடலை அவர்களின் மனைவியார் லட்சுமி அம்மாளிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து வழங்கி இருக்கிறோம். பங்காரு அடிகளார் ஆன்மீகப் பணி, கல்வி பணி, சமுதாயத் தொண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டு அம்மா அவர்களுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருது ஆகியவற்றை குறிப்பிட்டு பாரத பிரதமர் எழுதிய மடல் தவத்திரு பங்காரு அடிகளார் அவர்களின் மீது பிரதமர் கொண்டிருக்கும் பற்றை வெளிப்படுத்தும் விதமாக அமைந்து இருக்கிறது.


இவ்வாறு மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் அவர்கள் தங்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் இது பற்றி கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News