இந்திய வளர்ச்சிக்கு கடல் சார் பங்களிப்பு முக்கியம்.. குடியரசுத் தலைவர் கருத்து..

Update: 2023-10-29 00:52 GMT

சென்னையில் நடைபெற்ற இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், 7,500 கி.மீ நீளமுள்ள கடற்கரை மற்றும் 1,382 கடல் தீவுகளைக் கொண்ட குறிப்பிடத்தக்கக் கடல் நிலையை இந்தியா கொண்டுள்ளது என்றார். முக்கியமான கடல்வழி வர்த்தக வழித்தடங்களில் உத்திபூர்வமான இடத்தைத் தவிர, இந்தியாவில் 14,500 கி.மீ பயணிக்கும் நீர்வழிகள் உள்ளன என்று அவர் மேலும் கூறினார். நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கடல்சார் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது.


ஏனெனில் நாட்டின் வர்த்தகத்தில் அளவு அடிப்படையில் 95 சதவீதமும் மதிப்பு அடிப்படையில் 65 சதவீதமும் கடல் போக்குவரத்து மூலம் மேற்கொள்ளப்படுகிறது. கடலோரப் பொருளாதாரம் 4 மில்லியனுக்கும் அதிகமான மீனவர்களுக்கு வாழ்வளிக்கிறது, மேலும் இந்தியா சுமார் 2,50,000 மீன்பிடி படகுகளுடன் உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தி நாடாக உள்ளது. இத்துறையின் ஆற்றலை நாம் முழுமையாகப் பயன்படுத்துவதற்கு முன்னர், நாம் பல சவால்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும் என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். ஆழமான கட்டுப்பாடுகள் காரணமாக ஏராளமான சரக்குப்பெட்டகக் கப்பல்கள் அருகிலுள்ள வெளிநாட்டு துறைமுகங்களுக்குத் திருப்பி விடப்படுகின்றன என்று அவர் கூறினார். வர்த்தக மற்றும் பயணிகள் கப்பல் கட்டும் தொழிலில், செயல்திறன், பயன்பாடு, போட்டித்தன்மை ஆகியவற்றின் மிக உயர்ந்த தரங்களை நாம் இலக்காகக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.


இந்தியத் துறைமுகங்களின் செயல்பாட்டுத் திறன், கப்பல் வந்து செல்லும் நேரம் ஆகியவை உலகளாவிய சராசரி அளவுகோல்களுடன் பொருந்த வேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார். இந்தியத் துறைமுகங்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கு முன் உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். சாகர்மாலா திட்டம் "துறைமுக வளர்ச்சி" என்பதில் இருந்து "துறைமுகம் மூலமான வளர்ச்சிக்கு" ஒரு குறிப்பிடத்தக்க நகர்வாகும் என்று அவர் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News