தி.மு.க அமைச்சர்களுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை பா.ஜ.க எடுக்கும்.. அண்ணாமலை முடிவு..

Update: 2023-10-30 03:18 GMT

திமுக அமைச்சர்களுக்கு எதிராக குறிப்பாக ஒவ்வொரு ஊழல் செய்யும் அமைச்சர்களுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை பாஜக முன்னெடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் கருத்து தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக இதுபற்றி அவர் கூறும் பொழுது, "திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அவசரக் கதியில் முடித்து வைக்கப்பட்டுள்ளது.


மேல்முறையீடு செய்யப்படாதது அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்வதாக இருக்கிறது. குறிப்பாக ஊழல் வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் தமிழக பாஜக சார்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்படும். குறிப்பாக திமுகவின் ஒவ்வொரு ஊழல் அமைச்சர்களுக்கும் எதிரான சட்ட போராட்டத்தை பாஜக சார்பில் நான் முன்னெடுப்பேன் என்றும்"  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்.


நாமக்கல் மாவட்டம் கிழக்கு மண்டலம் பட்டியில் அணி மாவட்ட பொது செயலாளர் கந்தசாமி இல்லத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதிய உணவுகளை சாப்பிட்டார். பிறகு கந்தசாமி குடும்பத்தினரிடம் வரவேற்பும், விருந்தினர் உணவும் இன்றைய தினத்தில் மிகவும் சிறப்பு அளிக்கிறது. அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சமூக வலைத்தள பக்கங்களில் கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News