இந்து முன்னணி கொடி கம்பத்தில் பேனரை வைத்த தி.மு.க.. அரை மணி நேரத்தில் அப்புறப்படுத்திய நிகழ்வு..

Update: 2023-11-09 03:30 GMT

திமுகவை சேர்ந்தவர்கள் ஆங்காங்கே பேனர் வைப்பது வழக்கமாகக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு கட்சி நிகழ்வு என்றால் திரும்பும் பக்கம் எல்லாமும் பேனர்களை வைத்து அந்த நிகழ்வை பெரிது படுத்த முயற்சி செய்கிறார்கள். குறிப்பாக ஒரு கட்சி சம்பந்தப்பட்ட பேனர் என்பது மற்றொரு கட்சியை மதிக்காத வகையில் வைப்பது அந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்து இருக்கிறது.



தற்பொழுது இந்து முன்னணி அமைப்பின் கொடிக்கம்பத்தை திமுகவை சேர்ந்தவர்கள் பேனர் வைத்த நிகழ்வு தான் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பு இருக்கிறது. திருவள்ளூர் நகரில் உள்ள இந்துமுன்னணி கொடிக்கம்பத்தில் திமுகவை சேர்ந்தவர்கள் விளம்பர பேனரை கட்டியிருந்தனர். தகவல் தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தொலைபேசி வாயிலாக பொறுப்பாளர்கள் தகவல் கொடுத்து அடுத்த அரை மணி நேரத்தில் கொடிக்கம்பத்தில் இருந்த விளம்பர பதாகையை காவல்துறையினர் வந்து அப்புறப்படுத்தினர்.


தங்களுடைய கொடிக்கம்பத்தில் திமுக தரப்பினர் செய்த செயல்கள் குறித்து இந்து முன்னணி அமைப்பினை சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்கள். அதன் பெயரில் அடுத்த அரை மணி நேரத்தில் திமுகவின் பேனர் அகற்றப்பட்டு மீண்டும் இந்து முன்னணியின் கொடி கம்பம் கட்டப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News