நீலகிரி: மலை ரயில் சேவை 15 நாட்களுக்கு ரத்து !

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊட்டி மலை ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. இதன் பின்னர் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் 6ம் தேதி முதல் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. ஊட்டி, குன்னூர் இடையே மூன்று முறையும் மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே ஒரு முறையும் இயக்கப்பட்டு வந்தது.

Update: 2021-11-01 05:22 GMT

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊட்டி மலை ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. இதன் பின்னர் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் 6ம் தேதி முதல் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. ஊட்டி, குன்னூர் இடையே மூன்று முறையும் மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே ஒரு முறையும் இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மேட்டுப்பாளையம், குன்னூர் செல்லும் வழியில் பாறை விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்ததால் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. அதன் பின்னர் சீரமைப்பு பணி முடிந்து கடந்த அக்டோபர் மாதம் மேட்டுப்பாளையம், ஊட்டி இடையே மலை ரயில் இயக்கப்பட்டது. இதனையொட்டி ஊட்டி ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் குன்னூர், ரயில் பாதையில் அடர்லிக்கும் ஹில்குரோவுக்கும் இடைப்பட்ட பகுதியில் 16வது கிலோ மீட்டரில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக இரண்டு நாட்கள் ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. 2 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த மலை ரயில் சேவை கடந்த அக்டோபர் 9ம் தேதி மீண்டும் தொடங்கிய நிலையில் கடந்த அக்டோபர் 10ம் தேதி கல்லார் அடர்லி இடையே மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தின் மீது விழுந்துள்ளது. இதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் தண்டவாள சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தது. இருந்த போதிலும் மழை காரணமாக மலை ரயில் சேவை 15 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News