தென்பெண்ணை ஆற்றில் பாடலீஸ்வரருக்கு சிறப்பு தீர்த்தவாரி!
கடலூர், திருப்பாதிரிப்புலியூரில் பாடல் பெற்ற பாடலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆற்றுத் திருவிழா மற்றும் ரத சப்தமியன்று தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
கடலூர், திருப்பாதிரிப்புலியூரில் பாடல் பெற்ற பாடலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆற்றுத் திருவிழா மற்றும் ரத சப்தமியன்று தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
அதே போன்று இன்று ரதசப்தமி முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றில் பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாமி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலூர் புதிய ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும், சாமிக்கு கலச பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதன் பின்னர் சாமிக்கு மகாதீபாரதனை செய்யப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Maalaimalar