தமிழக மக்களின் அன்பு மனதை விட்டு நீங்காது ! - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் !

தமிழக மக்களின் அன்பும், ஒத்துழைப்பும் மனதை விட்டு எப்போதும் அழியாது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-13 02:06 GMT

தமிழக மக்களின் அன்பும், ஒத்துழைப்பும் மனதை விட்டு எப்போதும் அழியாது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் ஆளுநராக மாற்றப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக மக்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோரிடம் மிகச் சிறந்த அன்பும், வாழ்த்துகளும் பெற்று அதற்கு நன்றி உடையவனாக விடைபெறுகிறேன். தமிழக மக்கள் வரவேற்கக் கூடிய வகையில் நடந்து கொண்டனர். இதற்கு எனது மனமார்ந்த நன்றி.

மாநில அளவில் அரசியல் சாசனத்தை பாதுகாக்கின்ற பொறுப்பாளராக இருந்த நான் அரசியல் சட்டம் வழங்கிய விதிகளின் அடிப்படையில், சில பொறுப்புகளை வகித்துள்ளேன். எனது முடிவுகளை மக்கள் புரிந்துகொண்டு அதற்கு ஆதரவு கொடுத்தமைக்கு மகிழ்ச்சியை கூற விரும்புகிறேன்.

அது மட்டுமின்றி தமிழகத்தின் வரலாற்று பாரம்பரியமிக்க மற்றும் சமூக ரீதியான சிறந்த கலாசாரத்தை தெரிந்து கொள்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு அவர் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News