மக்கள் பக்கம்: சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் அமைத்துதர மனு!

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகாவை சேர்ந்த ஒருவர் தங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தி விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Update: 2021-11-23 06:59 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகாவை சேர்ந்த ஒருவர் தங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தி விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

இது பற்றி அவர் கதிர் மக்கள் பக்கத்திற்கு அனுப்பியுள்ள புகார் கடிதத்தில், மாத்தூர் ஊராட்சி வளர்ச்சிப் பணிக்காக, கழிவுநீர் கால்வாய் மற்றும் தார்சாலை தரமான குடிநீர் ஏற்படுத்த வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்கும் மக்காத குப்பைகள், சுடுகாட்டுக்கு சாலை வசதி ஏற்படுத்துதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மழைநீர் செல்லும் பாதைகள் மற்றும் குளம், ஊரணியில் வேலை செய்ய வலியுறுத்திய தொடர்பான மனுவை ஊரக வளர்ச்சித் துறை கிராம ஊராட்சி மேலாளரிடம் நேரடியாக மனு அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் அனுப்பியுள்ள புகார் கடிதம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.


Tags:    

Similar News