"தை பிறந்தால் வழி பிறக்கும்" தமிழில் பூரிப்புடன் உரையாற்றிய மோடி!

Update: 2022-01-12 12:21 GMT

தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ராமநாதபுரம், திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், அரியலூர், நாகையில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக அர்ப்பணித்தார்.

மேலும், சென்னை பெரும்பாக்கத்தில் 70 ஆயிரம் சதுர அடியில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன மையக்கட்டிடத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதன் பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து என்று கூறினார். மேலும், அனைத்து சகோதர, சகோதரிகளுக்கு எனது வணக்கும் எனவும் கூறினார். மிகவும் பழமை வாய்ந்த மொழியான தமிழில் சில நிமிடங்கள் பேசுவதற்கு தனக்கு வாய்ப்பு கிடைத்தது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியான தருணங்களில் இதுவும் ஒன்று என்றார்.

Source: Daily Thanthi

Image Courtesy: ANI

Tags:    

Similar News