கோவிலில் 12 ஆம் நூற்றாண்டு சிலைகள் பதுக்கல் - கோர்ட்டில் ஒப்படைத்த போலீசார்!

கோவிலில் பன்னிரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த உலகு சிலைகள் பதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடித்து போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்து இருக்கிறார்கள்.

Update: 2022-10-30 07:25 GMT

ஆலமரத்தின் பொந்தில் பழங்கால சிலைகள்:

நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ளது பண்ணகா பரமேஸ்வரி சுவாமி கோவில். இங்குள்ள பிரகாரத்தில் அமைந்துள்ள ஆலமரத்தின் பொந்தில் கணக்கில் காட்டப்படாத பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பொருள் சாருக்கு தகவல் கிடைத்தது. இதை எடுத்து திருச்சி கூடுதல் எஸ்.பி பாலமுருகன் தலைமையிலான குழு கடந்த 26 ஆம் தேதி அதிகாலையில் கோவிலில் திடீர் சோதனை செய்தது. சோதனையின் போது 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் சிலைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.


கணக்கில் காட்டப்படாத கோவில் சிலைகள்:

இந்த சிலைகள் விபரம் குறித்து கோவில் பதிவேடுகளில் ஆய்வு செய்தபோது, அவற்றில் அவை இடம்பெறாதது தெரியவந்துள்ளது. கோவில் செயல் அலுவலருக்கு இந்த சிலை குறித்து எந்த விவரமும், இதுவரை தெரியாமல் இருந்துள்ளது. இவற்றை கைப்பற்றிய குழுவினர் குடந்தை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்து இருக்கிறார்கள். கணக்கில் காட்டப்படாத கோவில் சிலைகள் மீட்கப்பட்டு காவல் நிலையத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சாருடன் மீட்கப்பட்டு உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கோவில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு விநாயகர் சிலை காணாமல் போனது. போலீசார் விசாரணையில் சோமசுந்தரம், சந்திரசேக அம்மன், தேவி, ஆஸ்திரியாதேவர், பிடாரி அம்மன், நவகிரக சூரிய என 11 பழங்கால கோவில் சிலைகள் திருடப்பட்டு கண்டுபிடிக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. திருக்குவளைக்கு அருகில் உள்ள பன்னக பரமேஸ்வர சுவாமி கோயிலில் உள்ள மறைவான அறையில் இருந்து 12ஆம் நூற்றாண்டு திருஞானசம்பந்தர், வள்ளி மற்றும் புவனேஸ்வரி ஆகிய மூவரின் சிலைகளை சிலைப் பிரிவு போலீஸார் கைப்பற்றினர். சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வெண்கலம் ஆஜர்படுத்தப்பட்டது.

Input & Image courtesy: 



Tags:    

Similar News