சிறப்பு எஸ்.ஐ. கொலை வழக்கு! விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்: திருச்சி சரக டி.ஐ.ஜி. தகவல்!

புதுக்கோட்டை அருகே கீரனூர் என்ற இடத்தில் சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதனை ஆடு திருடிச்சென்ற கும்பல் சராமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று திருச்சி டிஜஜி தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-21 13:09 GMT

புதுக்கோட்டை அருகே கீரனூர் என்ற இடத்தில் சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதனை ஆடு திருடிச்சென்ற கும்பல் சராமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று திருச்சி டிஜஜி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிறப்பு எஸ்.ஐ. கொலை வழக்கு தொடர்பாக திருச்சி சரக டிஜஜி சரவண சுந்தர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: இரவு நேரங்களில் ஆடு திருடியவர்களை விரட்டி சென்று பிடிப்பதற்காக சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் சென்றபோது அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அதனை செய்த குற்றவாளிகளை பிடிப்பதற்காக 4 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News