பயங்கரவாதிகள் என கூறியதால் ஆளுநர் மாளிகை முற்றுகையிட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் அமைப்பு!

Update: 2022-05-08 09:35 GMT

பயங்கரவாதிகள் மறைமுகமாக ஆதரித்து வருவதாக கூறிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர். சமீபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு பயங்கரவாதிகளுடன் மறைமுகமாக தொடர்பு வைத்துள்ளது என்று கூறினார். இவரது கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தங்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டு விட்டாரே ஆளுநர் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளது.

சென்னை, கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை முன்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டத்தை தொடர்ந்து அங்கு 200க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆளுநரை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்ற முழக்கத்தை எழுப்பினர்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News