பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 68 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது - மக்கள் கொண்டாடும் 'மோடி வீடு'

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தற்பொழுது 68 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது.

Update: 2023-02-12 04:18 GMT

பிரதமர் வீட்டு வசதி திட்டம் ஏழை எளிய மக்களுக்கு குறிப்பாக வீடு இல்லாத மக்களுக்கு வீடு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று ஒரு நோக்கில் தொடங்கப் பட்டது. இந்த பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தற்போது வரை நகர்ப்புறங்களில் சுமார் 68.02 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட இருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நாடாளுமன்றத்தில் மக்கள் அவையில் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் எத்தனை தகர்ப்புற வீடுகள் கட்டப்பட்டு இருக்கிறது என்று கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. அதற்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார துறை இணை அமைச்சர் கிஷோர் அவர்கள் தற்போது பதில் அளித்து இருக்கிறார். குறிப்பாக அவர் கூறுகையில், நிலம் மற்றும் காலணித்துவம் ஆகியவையை மாநில அதிகாரத்தில் தான் இருக்கிறது.


மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை அவற்றை செய்ய வேண்டும். இருப்பினும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவி வழங்குகிறது அதன் அடிப்படையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பிரதமர் வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பயனாளிகளுக்கான தனிநபர் மீது கூட்டான்மை முறையிலான மலிவு விலை வீடு, கடனோடு இணைந்த மாநிலத்திட்ட வீடு மற்றும் குலசை மாற்றும் அடிப்படையில் ஆன மறு வளர்ச்சி வீடு என நான்கு நிலைகளில் தற்போது வரை செயல்படுத்தப் படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதில் பயனாளிகள் ஏதேனும் ஒன்று பிரிவை தேர்வு செய்து நாட்டில் இந்த திட்டத்தில் வீடு தேவைப்படுவோர் அதன் உண்மையான நிலவரம் பற்றி 2017 ஆம் ஆண்டு கண்டிப்பாக அதில் தகுதி உள்ளவர்கள் மட்டும் தான் பயன் பெற முடியும்.


அந்த வகையில் மார்ச் 33 2023 ஆம் ண்டு வரை 122.69 லட்சம் வீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் 25 லட்சத்து 36 ஆயிரத்து 864 மானிய வீடுகளுக்கும், 72 லட்சத்து 43 ஆயிரத்து 674 தனி நபர் வீடுகளுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் கடந்த மூன்று ஆண்டுகளை பொறுத்தவரையில் நாடு முழுவதும் 2 லட்சத்து 2 ஆயிரம் கோடி அனுமதிக்கப்பட்டதில் ஒரு லட்சத்து 36,000 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திற்கு 11,283.10 கோடி அனுமதிக்கப்பட்டு 85.30 கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News