ஆடிப்பூரத்தை முன்னிட்டு பழனி கோயிலில் பக்தர்களுக்கு தடை !

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இரண்டு வாரங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மதவழிபாட்டு தலங்களை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-08-11 08:15 GMT

ஆடி பூரத்தை முன்னிட்டு இன்று பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இரண்டு வாரங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மதவழிபாட்டு தலங்களை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று ஆடி பூரம் கொண்டாடப்படும் நிலையில், பக்தர்கள் அதிகமாக கூடுவார்கள் என்பதால், பழனி கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும், ஆகம விதிப்பதி அனைத்து பூஜைகளும் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Source: Puthiyathalamurai

Image Courtesy:Puthiyathalaimurai

https://www.puthiyathalaimurai.com/newsview/112598/prohibition-for-devotees-at-Palani-temple

Tags:    

Similar News