தமிழகத்தில் ஆட்சி செய்பவர்கள் ஏழைகளா.. சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.!

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்னர் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குறிஞர், 10 சதவீதப் பேருந்துகள் மட்டும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வசதி உள்ளதாகக் கூறினார்.

Update: 2021-07-22 13:22 GMT

மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் இல்லாத புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கல்வி நிறுவனங்கள், மற்றும் அரசுக் கட்டிடங்கள், ரயில், பேருந்து உள்ளிட்டவைகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கடந்த 2016ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. இது தொடர்பாக வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்னர் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குறிஞர், 10 சதவீதப் பேருந்துகள் மட்டும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வசதி உள்ளதாகக் கூறினார்.

மேலும், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், வசதிகள் செய்யப்பட்ட வசதிகளின் பேருந்து விலை 58 லட்சம் ரூபாய் அளவுக்குச் செலவாகும் எனவும், தற்போது நிதி பிரச்சனை உள்ளதால் 10 சதவீதப் பேருந்துகள் மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கொள்முதல் செய்யப்படும். மேலும், கொரோனா தொற்று பரவல் உள்ளதாலும், இந்தியா ஏழை நாடு எனவும் கூறினார்.


இதனை தொடர்ந்து ஆட்சியாளர்கள் ஏழைகளாக உள்ளனரா? எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஏழைகள்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தையும், அதன்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்புகளை அமல்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாத பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.

Tags:    

Similar News