தமிழகத்தில் பொதுப் போக்குவரத்தை தொடங்கலாம்.. மருத்துவர்கள் குழு அரசுக்கு பரிந்துரை.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தற்போது வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகின்ற 21ம் தேதி வரை உள்ளது. தொற்று குறைந்து வரும் சூழ்நிலையில் தளர்வுகளும் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-06-19 13:56 GMT

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் பொதுப் போக்குவரத்தை தொடங்கலாம் என்று மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.




 


தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தற்போது வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகின்ற 21ம் தேதி வரை உள்ளது. தொற்று குறைந்து வரும் சூழ்நிலையில் தளர்வுகளும் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.


 



இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும், கொரோனா ஊரடங்கு வரும் 28ம் தேதி வரை நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

Similar News