மணக்குள விநாயகர் கோயில் யானை இறப்புக்கு இது தான் காரணமா? ஆர்வலர்கள் முன்வைக்கும் பகீர் குற்றச்சாட்டு!

Update: 2022-12-01 02:39 GMT

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி காலை நடைப்பயணத்திற்கு வெளியே சென்றபோது சாலையில் சரிந்து விழுந்து இறந்தது. 30 வயதே ஆன அவள் புதுச்சேரி மக்களால் நேசிக்கப்பட்டது. 

கீழே சரிந்து விழுந்த போது கால்நடை மருத்துவர்கள் மருத்துவ உதவி வழங்க விரைந்தனர். ஆனால் யானை மாரடைப்பால் இறந்துவிட்டதாக  கூறப்படுகிறது.

லட்சுமியின் மரணத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கோயில் ஆர்வலர்கள் மற்றும் யானை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்திய வனத்துறை அதிகாரி வஞ்சுலவல்லி ஸ்ரீதர் மற்றும் மேனகா காந்தி ஆகியோர் இதற்கு காரணம் என்கின்றனர். 

கொரோனா தொற்றின் போது மேனகா காந்தியால் மணக்குள விநாயகர் கோயிலில் இருந்து லட்சுமி வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினர்.

அப்போதைய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமெரிக்கா நாராயணன் மற்றும் இந்து மக்கள் கட்சி ஆகியோரின் உதவியுடன் லட்சுமியை மீட்டோம். ஆனால் அதன் பிறகு யானையை வாக்கிங் செல்லக்கூட அனுமதிக்காமல் வனத்துறையினருக்கு அழுத்தம் கொடுத்தார் மேனகா. இதனால் அவர் லக்ஷ்மி உடலில் தண்ணீர் தேங்கி, மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது என கூறப்படுகிறது. 


Similar News