போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி மாற்றம்: மத்திய அரசு அறிவிப்பு!

Update: 2022-01-19 03:04 GMT

நாடு முழுவதும் ஜனவரி 23ம் தேதி தொடங்கவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ம் தேதிக்கு மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சிறு குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் போலியோ சொட்டு மருந்து முகாம் தேதியை மாற்ற வேண்டும் என்று மாநில அரசுகள் கோரிக்கை வைத்திருந்தது. இதனையடுத்து போலியோ சொட்டு மருந்து முகாம் அடுத்த மாதம் பிப்ரவரி 27ம் தேதிக்கு மாற்றி மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலை பின்பற்றி தமிழகத்திலும் பிப்ரவரி 27ம் தேதி அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என சுகாதாரத்துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Puthiyathalaimurai

Image Courtesy:DT Next

Tags:    

Similar News