தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை: ரெட் அலார்ட் செய்த வானிலை மையம்!

வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் மட்டும் கடந்த 6ம் தேதி நள்ளிரவில் ஒரு நாளில் மட்டும் அதிகமாக 23 செ.மீ. மழை பெய்துள்ளது. அதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மிக கன மழை பெய்து வரும் நிலை உருவாகியுள்ளது.

Update: 2021-11-10 03:38 GMT

வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் மட்டும் கடந்த 6ம் தேதி நள்ளிரவில் ஒரு நாளில் மட்டும் அதிகமாக 23 செ.மீ. மழை பெய்துள்ளது. அதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மிக கன மழை பெய்து வரும் நிலை உருவாகியுள்ளது.

இதனிடையே வடகிழக்கு பருவமழையின் தீவிரம் நாளை (11.11.2021, 12.11.2021) ஆகிய நாட்கள் வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. அதன்படி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதன்படி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் கனமழை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

அது மட்டுமின்றி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மின்னலுடன் கூடிய கனமழையும், ஒரு சில இடங்களில் அதீத கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.

Source, Image Courtesy: Daily thanthi


Tags:    

Similar News