சாதி வெறுப்பைத் தூண்டும்.. ரெட் பிக்ஸ் யூ ட்யூப் சேனல்.! நடவடிக்கை வருமா?
சாதி வெறுப்பைத் தூண்டும்.. ரெட் பிக்ஸ் யூ ட்யூப் சேனல்.! நடவடிக்கை வருமா?
ரெட் பிக்ஸ் என்ற தமிழ் யூடியூப் சேனலை சேர்ந்த ஒரு நிருபர் சில பிராமணப் பெண்களை தொடர்ந்து கேள்வி கேட்கிறேன் என்ற பெயரில் அவதூறாகவும், தொந்தரவு செய்யும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆன்லைனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வீடியோவில் புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்துக்கொண்டு பிராமணர்களுக்கு எதிராக ஜாதிவெறி தூண்டுவதையும் காணலாம்.
பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகள் (EWS) ஒதுக்கீட்டைப் பற்றி விவாதிக்க, சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் அருகே ஒரு நிகழ்வு நடந்தது. அந்த விவாதத்தில் அரசாங்கம் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தயங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
அந்த நிகழ்வு முடிந்த சில தருணங்களில் ரெட் பிக்ஸ் நிருபர் பிரச்சினையை ஆரம்பித்தார். கூட்டம் கலைந்து செல்ல தொடங்கியதும் ரெட் பிக்ஸ் நிருபர் சம்மந்தமே இல்லாமல் ஹிந்துப் பெண்கள் கோவில் பூசாரிகளாக மாற முடியுமா அல்லது சங்கராச்சாரியார் ஆக முடியுமா என்று கேள்விகளை கேட்கத் தொடங்கினார். மனு தர்மத்தின் படி பெண்கள் படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பச்சையாக பொய் கூறினார்.
அவர் பின்னர் இந்து வேதங்கள், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான பதவிகள், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் ஆகியவற்றைப் பற்றியும் புகழ்பெற்ற பல பகுதியில் பதவிகள் பிராமணர்களால் மட்டுமே வகித்து வருவதாகவும் குற்றம் சுமத்தினார்.
பா.ஜ.க அமைச்சரவையில் 13 அமைச்சர்கள் மட்டுமே ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆகவும் மற்ற அனைவரும் உயர் ஜாதி மற்றும் பிராமணர்கள் சேர்ந்தவர்களாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த ஆட்சி அமைய முக்கியமான காரணமாக இருந்த பிரதமர் மோடியை ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர் என்பதை வசதியாக குறிப்பிட மறுக்கிறார்.
ஏன் பா.ஜ க அமைச்சரவையில் பெரும்பாலும் உயர் ஜாதியும் பார்ப்பனர்களும் மட்டுமே இருக்கிறார்கள் என்று தொடர்ந்து ஒரு பெண்ணை கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். மற்றொரு பெண் குறிப்பிட்ட அந்த பெண்ணை அழைத்து செல்கிறார்.