கோவை: ஆர்.எஸ்.எஸ். பயிற்சியை தடுக்க முயன்ற தி.க.வினரை கைது செய்த போலீஸ்!

கோவையில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சாகா பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இது போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கல்வி நிலையம் முன்பு போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2021-12-30 10:57 GMT

கோவையில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சாகா பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இது போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கல்வி நிலையம் முன்பு போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை, விளாங்குறிச்சி சாலையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக சாகா பயிற்சிகள் காலை நடைபெற்றது. இந்த பயிற்சியை மேற்கொள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி பள்ளிகள் முன்பாக குவிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த முற்றுகை போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் கேட்கவில்லை. இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சாலையில் உருண்டு புரண்டியதால் அவர்களை குண்டுகட்டாக போலீசார் தூக்கி சென்று கைது செய்தனர்.

Source: Daily Thanthi

Image Courtesy: The Hindu

Tags:    

Similar News