மதுரை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி... சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் செல்வதற்கு ஒரு வாய்ப்பு...

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நல்ல பிணைப்பை உருவாக்கியுள்ளது என கூறினார் பிரதமர்.

Update: 2023-04-16 00:00 GMT

காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி மத்திய அரசின் முயற்சியின் பெயரில் எடுக்கப்பட்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவாக கருதப்பட்டது. ஏனெனில் காசிக்கும் தமிழ் தமிழ்நாட்டிற்கும் இடையில் இருக்கும் தொடர்புகளை எடுத்துரைக்கும் விதமாக இந்த ஒரு தமிழ் சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வகையில் அடுத்ததாக சௌராஷ்டிரா தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசத்தில் நடைபெறும் இந்த ஒரு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு வருகிறார்கள்.


மதுரையிலிருந்து சவுராஷ்டிரா சங்கமத்திற்குச் செல்லும் முதல் சிறப்பு ரயிலை மதுரையில் கொடியசைத்து தொடங்கி வைத்ததை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்த சிறப்பான புத்தாண்டு தினத்தில், மதுரையில் இருந்து வெரவல் வரை ஒரு சிறப்பு பயணம் தொடங்கியுள்ளது. சவுராஷ்டிரா சங்கமம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாகும். இது மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.


மற்றொரு பதிவில், இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ள பிணைப்பு குறித்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சவுராஷ்டிரா சங்கமத்திற்கானப் பயணம் ஏற்படுத்தியுள்ள பண்டிகை சூழல் குறித்துத் தெரிவித்துள்ள பிரதமர், "சவுராஷ்டிரா சங்கமத்தை நோக்கிய உற்சாகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது" எனக் கூறியுள்ளார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News