சமூகத்தில் பாதுகாப்பு என்றால் தாயின் கருவறை, கல்லறை மட்டுமே: பாலியல் தொல்லையால் கடிதம் எழுதிவைத்து விட்டு பள்ளி மாணவி தற்கொலை!

சென்னை அடுத்துள்ள மாங்காட்டில் பள்ளி மாணவி ஒருவர் கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-12-19 06:19 GMT

சென்னை அடுத்துள்ள மாங்காட்டில் பள்ளி மாணவி ஒருவர் கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்துள்ள மாங்காட்டில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தற்கொலைக்கு முன்னர் கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளது கிடைத்துள்ளது.


அந்த கடிதத்தில் மாணவி எழுதி வைத்துள்ளதாவது: இதுக்கு மேல என்னால வாழ முடியாது... ரொம்ப வலிக்கிது.. எனக்கு ஆறுதல் சொல்லக்கூட யாருமே இல்லை...அந்த கனவு வந்து போவுது... படிக்க முடியல... இந்த சமூகத்துல பாதுகாப்பே இல்ல... பெண்களை மதிக்க ஒவ்வொரு பெற்றோரும் மகன்களுக்கு கற்று தர வேண்டும்... உறவினர்கள், ஆசிரியர்கள் என யாரையும் நம்பக்கூடாது... இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமுதாயத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். பள்ளியில் பாலியல் குற்றங்கள் நடைபெறுவதால் பெற்றோர்கள் மட்டுமின்றி மாணவிகளும் கவலை அடைந்துள்ளனர். படிக்க செல்லும் இடத்திலும் இது போன்ற பாலியல் குற்றங்கள் நடைபெறுவது சமீபகாலமாக அதிகரித்து வருவது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Tamil Samayam

Image Courtesy: Anadolu Agency

https://tamil.samayam.com/latest-news/crime/school-girl-wrote-letter-and-commits-suicide-in-chennai-mangadu/articleshow/88361457.cms

Tags:    

Similar News