காப்பகத்தில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: காப்பக உரிமையாளர் மகன் போக்சோவில் கைது!

Update: 2022-03-15 08:39 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் காப்பகத்தில் தங்கி படித்து வந்த பள்ளி மாணவியை காப்பக நிர்வாகியின் மகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் சோளிங்கரில் தனியார் காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது மகன் கார்த்திக் 28, என்பவர் காப்பகத்தை கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சரவணன் காப்பகத்தில் உள்ள மாணவிகளிடம் தவறாக நடந்து வந்தாக சொல்லப்படுகிறது. அதே போன்று பெற்றோரை இழந்து காப்பகத்தில் தங்கிய படித்த 17 வயது மாணவியை காதல் வலை வீசியுள்ளார். இதனால் மாணவி காப்பக நிர்வாகி மகன் என்பதால் சகஜமாக பழகியுள்ளார். இதனை தனக்கு சாதகமாக சரவணன் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

தனக்கு திருமணம் ஆகவில்லை, எனவே காதலிக்கிறேன் என்று சொல்லி மாணவியிடம் நெருக்கமாக பழகியுள்ளார். மேலும், திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி மாணவி அளித்த புகாரில் சரவணனை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். மேலும் மற்ற மாணவிகளுக்கு ஏதேனும் தொந்தரவு அளித்தாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Daily Thanthi

Image Courtesy: India Today

Tags:    

Similar News