மறு உத்தரவு வரும் வரை 9,10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தஞ்சையில் 112க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உஷாராக அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தஞ்சையில் 112க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உஷாராக அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தலைமைச்செயலாளர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கு பின்னர் தமிழகத்தில் 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு 22-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு காரணமாக வழிகாட்டு நெறிமுகைளை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.