ராசிபுரம் அருகே அரசுப்பள்ளி மாணவிக்கு கொரோனா: அதிர்ச்சியில் சக மாணவிகள்.!

ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையில் அமைந்துள்ள அரசுப்பள்ளி மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் சக மாணவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Update: 2021-03-16 12:43 GMT

ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையில் அமைந்துள்ள அரசுப்பள்ளி மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் சக மாணவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ளது நாமகிரிபேட்டை. அங்கு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு படித்து வரும் 9ம் வகுப்பு மாணவிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது.

இதனையடுத்து ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது.


 



இதனையடுத்து மாணவி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே போன்று சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தஞ்சையில் 56 மாணவி மற்றும் பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை போன்று தற்போது ராசிபுரத்திலும் மாணவி ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News