பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் - மகளிர் காவல் நிலையத்தில் புகார்!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் புகாரை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-08-30 07:37 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அமைந்துள்ள தனியார் பள்ளியில் தான் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. அங்குள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு அறிவியல் பாடம் எடுப்பவர் தான் அந்தோணி ராஜ் என்ற ஆசிரியர். இவர் அந்தப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளது இதனால் பாதிக்கப்பட்ட மாணவி தன்னுடைய பெற்றோரிடம் பள்ளியில் நடந்த நிகழ்வுகளை அனைத்தும் எடுத்துக் கூறினார்.      


இதைக் கேட்ட பெற்றோர் தன்னுடைய பாதிக்கப்பட்ட மகளின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று பொன்னேரி அடுத்துள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார்கள். அந்த புகாரின் பெய்து அறிவியல் ஆசிரியர் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் இதுபோன்ற பல்வேறு மாணவிகளிடம் இந்த மாதிரியான செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளாரா?என்பது குறித்த விசாரணை தற்போது நடந்து வருகிறது.


எனவே பள்ளி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த பள்ளியின் ஆசிரியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மாணவிகளுக்கு நடக்கும் இது போன்ற சம்பவங்கள், தற்போது அதிகரித்து வருகின்றது. சட்டப் பொறுப்பை காக்க வேண்டிய போலீஸ் அதிகாரிகள் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறி இத்தகைய செல்களை தடுக்க வேண்டும் என்றும் பெற்றோர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Input & Image courtesy:Polimer News

Tags:    

Similar News