மதுரை கோயில்களில் நடைபெறும் தொடர் திருட்டு: பக்தர்கள் அச்சம்!

Update: 2022-03-16 11:11 GMT

மதுரை அருகே உள்ள ஒரு கோயிலில் வைக்கப்பட்டிருந்த முருகன் மற்றும் தெய்வானை சிலைகள் திருடப்பட்டதாக கூறப்பட்டது. மதுரை, திருச்சி நெடுஞ்சாலையில் முத்து மாரியம்மன் மற்றும் ஐயப்பன் கோயில்கள் அமைந்திருக்கிறது. இதனிடையே முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த 9ம் தேதி 120 கிலோ பித்தளைப் பொருட்கள் திருடுபோனதாக கோயில் சார்பில் மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கிடையில் நேற்று (மார்ச் 15) இரவு கோயிலில் மற்றொரு அறையில் வைக்கப்பட்டிருந்த முருகன் மற்றும் தெய்வானையின் வெண்கல சிலைகள் திருடுபோயுள்ளதாக மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் போலீசார் இந்த வழக்கை தீவிரப்படுத்த முடிவு செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், கோயிலில் இரண்டு குழுவுக்கும் இடையில் ஏதாவது பிரச்சனைகள் இருந்திருக்கலாம், அதன் காரணமாகவும் கொள்ளை நடத்திருக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எது எப்படியோ கோயில்களில் தொடர்ந்து திருடுபோவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: News 7 Tamil

Image Courtesy: Tamilnadu Tourism

Tags:    

Similar News