SG சூர்யா கைது மூலம் தமிழ் மக்களின் உண்மைக்குரலை அடக்கிட முடியாது.. - C.T.ரவி சவால்!

Update: 2023-06-18 02:55 GMT

தமிழக அரசியலில் தற்போது பெரும் பேச்சு பொருளாக பா.ஜ.க மாநில செயலாளர் SG சூர்யா அவர்களின் கைது பார்க்கப்படுகிறது. குறிப்பாக பா.ஜ.க மாநில செயலாளர் SG சூர்யா அவர்களின் கைதுக்கு பல்வேறு தரப்பினரும் தன்னுடைய கண்டனத்தை அரசிற்கு தெரியப்படுத்த வருகிறார்கள். குறிப்பாக அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் வெகுவாக வளர்ந்து வருகிறது. கைதுக்கும், மிரட்டலுக்கும் பயந்தவர்கள் பாஜகவினர் கிடையாது என்பதை நிரூபிக்கும் விதமாக தொடர்ச்சியான வகையில் தமிழக அரசுக்கு எதிராக தங்களுடைய கண்டன கோஷங்களை தெரிவித்து வருகிறார்கள்.


அந்த வகையில் தற்பொழுது கர்நாடகாவை சேர்ந்த பா.ஜ.க பொதுச் செயலாளர் சி.டி.ரவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் SG சூர்யா அவர்களின் கைது நடவடிக்கைக்கு தன்னுடைய கண்டன பதிவு தெரிவித்து இருக்கிறார். இது பற்றி அவர் கூறும் பொழுது, "திறமையற்ற திமுக அரசுக்கு எதிராகக் கேள்வி எழுப்பியதற்காக பாஜக தமிழக மாநிலச் செயலாளர் SG.சூர்யாயை தமிழக காவல்துறை கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.


இதுபோன்ற கைதுகள் மூலம் தமிழ் மக்களின் உண்மைக் குரலை அடக்கிவிட முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் நினைத்தால், அவர் திராவிட மாடல் மாதிரி இல்லாமல் வெளியே வர வேண்டும். மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில், திமுகவின் ஊழல் ஆட்சியையும், மக்களுக்கு எதிரான அட்டூழியங்களையும் பாஜக தொடர்ந்து அம்பலப்படுத்தும்" என்று தெரிவித்து இருக்கிறார். 

Tags:    

Similar News