வயலில் சிவலிங்கத்திருமேனி, நந்தி கண்டெடுப்பு!

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, எல்லப்புரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆத்துப்பாக்கம் ஊராட்சி, ஈஸ்வரன் மேடு பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகின்றார். அவருக்கு சொந்தமான நிலத்தை ஜேசிபி இயந்திரம் கொண்டு சமன் செய்துள்ளார்.

Update: 2022-02-02 03:12 GMT

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, எல்லப்புரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆத்துப்பாக்கம் ஊராட்சி, ஈஸ்வரன் மேடு பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகின்றார். அவருக்கு சொந்தமான நிலத்தை ஜேசிபி இயந்திரம் கொண்டு சமன் செய்துள்ளார்.

அப்போது வயலில் சிவபெருமான் மற்றும் நந்தி ஆகிய இரண்டு கடவுள்களின் சிலைகள் கிடைத்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்த சுற்றுவட்டார கிராம மக்கள் அண்ணாமலை வயலில் குவியத் தொடங்கினர். அங்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு கடவுள்களின் சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து வணங்கினர்.

இது தொடர்பாக கிராம மக்கள் கூறும்போது, இந்த இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் கோயில் இருந்துள்ளது. அப்போது வைக்கப்பட்டிருந்த சிலைகள்தான் இது. இப்பகுதிகளில் தோண்டினால் மேலும் பல கடவுள்களின் சிலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றனர்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News