உலக அளவில் தடை செய்யப்பட்ட 'மெத்' போதை பொருள் கன்னியாகுமரியில் பறிமுதல் - போதை ஆபத்தில் தமிழகம்?

Update: 2022-04-16 14:06 GMT

மிகவும் ராகி அளவு கொண்டு மெத் கிரிஸ்டல் நாக்கில் வைத்தால் கிட்டத்தட்ட ஒரு நாள் பூராவும் போதை இறங்காது என்று சொல்லப்படுகிறது. இது போன்ற மோசமான போதை பொருள் ஆபத்தை விளைவிக்கும் என்று உலக நாடுகள் அனைத்துமே தடை செய்துள்ளது. ஆனால் தமிழகத்தில் அதுவும் கன்னியாகுமரியில் விற்பனை செய்வது அதிர்ச்சியை அளிக்கிறது. இது பற்றி 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வகையான போதைப்பொருளுக்கு உலகளவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் தற்போது கிடைத்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த போதைப்பொருள் இளைஞர்கள் கையில் கிடைத்தால் அவர்களின் வாழ்க்கை என்னாகும். அதனால் ஏற்படும் பின்விளைவுகள் எவ்வளவு மோசமானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே போலீசார் இது போன்ற ஆபத்தை விளைவிக்கும் போதைப்பொருளை அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும் ஆகும்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News