தமிழகத்தில் திடீரென தலைதூக்கும் வெடிகுண்டு, துப்பாக்கி கலாச்சாரம்: இனி என்னைக்கும் "விடியலே" இல்லையா ?

shocking-report-rising-in-gun-and-bomb-culture-in-tamil-nadu

Update: 2021-11-01 09:10 GMT

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொடூரக்கொலைகள் அரங்கேறி வருகிறது. அவை பெரும்பாலும் ரவுடி கும்பல்களின் பழிக்கு பழி, முன்விரோதம் மற்றும் அதிகார போட்டிகளுக்காக நிகழ்த்தப்பட்டது.

இதனை தொடர்ந்து சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச்செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தமிழகத்தின் கடந்த சில ஆண்டுகளாக ரவுடிகளிடம் துப்பாக்கிகள் பறிமுதல் செய்வது சாதாரணமாகிவிட்டது. தமிழகத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்களின் கைகளில் தற்போது துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருவது மிக ஆபத்தானது.

அதிலும் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





Tags:    

Similar News