சிறுவாச்சூர் சாமி சிலை உடைப்பு : பெரம்பலூரில் இந்து முன்னணி சத்தியாகிரக போராட்டம் !

Update: 2021-11-11 12:35 GMT

சிறுவாச்சூரில் நான்காவது முறையாக சாமி சிலை உடைப்பை எதிர்த்து இந்து முன்னணி சார்பில் பெரம்பலூரில் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்பட்டது. 

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் நான்காவது முறையாக சாமி சிலைகள் உடைக்கப்பட்டது. இந்த சம்பவம்  இந்து மக்களிடையே மிகப்பெரிய  வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை எதிர்த்து இந்து முன்னணி நவம்பர் 9 அன்று கண்டனத்தை வெளிப்படுத்தியது.இதை தொடர்ந்து இன்று சத்தியாகிரக போராட்டம். நடத்தியது.

இது தொடர்பாக இந்துமுன்னணி வெளியிட்ட அறிவிப்பில் :

சிறுவாச்சூரில் சாமிசிலைகள் உடைப்பை கண்டித்து சத்தியாகிரக போராட்டம் செய்த இந்துமுன்னணியினர் கைது.இந்து அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர்பாபு இதற்கு பதில் கூறுவாரா.??? வேடிக்கை பார்க்கும் விடியல் முதல்வர்.




 என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Hindu Munnani



Tags:    

Similar News