திண்டுக்கல்லில் மக்கள் நீதி மன்றம் மூலம் 84 வழக்குகளுக்கு தீர்வு.!
ஒரே நேரத்தில் இவ்வளவு வழக்குகள் தீர்வு காணப்பட்டதற்கு பொதுமக்கள் நீதித்துறைக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மன்றம் மூலம் ரூ.3.68 கோடி தீர்வு தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது. 84 வழக்குகளுக்கு 9 அமர்வுகள் மூலம் நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா தலைமையிலும், நிரந்தர மக்கள் நீதிமன்றம் தலைவர் புவனேஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள நிலுவையில் இருந்த 84 வழக்குகளுக்கு 9 அமர்வுகள் மூலம் நிரந்தர தீர்வு காணப்பட்டு ரூ.3 கோடியே 68 லட்சத்து 20 ஆயிரத்து 46 தீர்வு தொகையாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் இவ்வளவு வழக்குகள் தீர்வு காணப்பட்டதற்கு பொதுமக்கள் நீதித்துறைக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.