தமிழக மீனவர்கள் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதல் !

இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர் ஒருவர் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-10-19 05:59 GMT

இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர் ஒருவர் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கையின் கடல் வளத்தை கொள்ளையடித்து செல்வதாக கூறி இலங்கை வடக்குப் பகுதியில் உள்ள மீனவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று இலங்கையின் முல்லைத்தீவு முதல் பருத்தித்துறை வரை கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால் எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை பிடிக்க இலங்கை கடற்படையினர் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் மீன் பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையின் கப்பல் தமிழக மீனவரின் விசைபடகு மீது மோதியுள்ளது. இதில் படகு கீழே கவிழ்ந்து படகில் இருந்த 3 பேரும் நீரில் தத்தளித்துள்ளனர். இதில் இரண்டு பேரை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியதாகவும் மீதம் ஒருவர் கடலில் மாயமாகியதாகவும் அவரை தொடர்ந்து தேடி வருவதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: News 7 Tamil

Image Courtesy:Thehindu


Tags:    

Similar News