தமிழக கோயிலுக்கு தானமாக வழங்கும் மாடுகள் அடிமாட்டுக்கு விற்கும் அவலம்?

Update: 2022-03-03 09:03 GMT

தானமாக வழங்கப்பட்டு வரும் பசுமாடுகளின் விவரங்களை அளிக்கும்படி ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தானமாக அளிக்கப்படும் பசு மாடுகளை பராமரிப்பதற்கு 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்யக்கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னைய உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கானது தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது கோயிலுக்கு தானமாக வழங்கப்பகின்ற பசுமாடுகள் பால் கொடுப்பதை நிறுத்திய பின்னர் அவை சுய உதவிக்குழுக்களுக்கும், பூசாரிக்களுக்கும் அறநிலையத்துறைக்கும் வழங்குவதாகவும், அடிமாட்டுக்கும் விற்பனை செய்யப்படுகிறது என்று மனுதாரர் சார்பில் குற்றம் சுமத்தப்பட்டது. இதனை மறுத்த அறநிலையத்துறை, பசுக்கள் முறையாக பாதுகாக்கப்படுகிறது. பசுக்களின் பாதுகாப்புக்கு அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், இந்த பசுக்கள் அடிமாட்டுக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறுவது தவறு என கூறினர்.

அதற்கு குறுக்கிட்ட மனுதாரர், கோயில் பூசாரிகளுக்கும், பசுக்களை பராமரிக்கின்ற அளவுக்கு வருமானம் இல்லை என்றார். இதனை தொடர்ந்து பூசாரிகளுக்கு பசுக்களை மறுதானம் வழங்குவதை நிறுத்திவிட்டு அதனை கோசாலைகளுக்கு அனுப்பலாம் என்று நீதிபதிகள் கூறினர். மேலும், தானமாக வழங்கும் பசுக்களின் விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி உத்தரவிட்டனர்.

Source: Samayam

Image Courtesy: Sarvamoolapatrika

Tags:    

Similar News