2ம் கட்டமாக 100 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கிய ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம்.!
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 2ம் கட்டமாக 100 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 2ம் கட்டமாக 100 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு உதவித்தொகை
இந்தக் கல்வியாண்டில் 7,000 மாணவர்கள் பயன்பெறுவர் தூத்துக்குடி கடலோர சமுதாயங்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள்
பொருளாதார தடைக்கற்களால், மாணவர்களின் முறையான கல்வி தடைபடலாம், அர்த்தமுள்ள, வளமான எதிர்காலப் பணிகளைப் பெறுவதிலும் பாதிப்பு ஏற்படலாம். இந்தச் சூழ்நிலையால், குறைவான கல்வியும், அதனால் எதிர்காலத்தில் குறைவான வருவாயும், சிரமமான வாழ்நிலையும் கூட நமது சமுதாயத்தில் ஏற்படலாம்.
தூத்துக்குடி மாணவர்கள், பிரகாசமான எதிர்காலத்தை அடைவதற்கு ஊக்கப்படுத்தும் விதமாக, இன்று ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், கடலோரப் பகுதி மாணவர்களுக்கான ஸ்டெர்லைட் கல்வித் திட்டம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஏற்கனவே உள்ள தாமிர வித்யாலயா பள்ளி மற்றும் உதவித் தொகைத் திட்டத்தின் தொடர்ச்சியாகும்.
இந்த இரண்டாம் கட்டத்துக்கான தொடக்கவிழா நிகழ்ச்சியில், கடலோர சமுதாயங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு 5.45 லட்ச ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நேரில் காண்பதற்கு அம்மாணவர்களின் பெற்றோரும் அழைக்கப்பட்டனர். உதவித்தொகை வழங்கப்பட்ட விவரம் பின்வருமாறு:
வகுப்பு வழங்கப்பட்ட நிதி உதவி
1 முதல் 5 4000 ரூபாய்
6 முதல் 8 6000 ரூபாய்
9 முதல் 10 7000 ரூபாய்