புயல் முன்னெச்சரிக்கை.. 2 ரயில்கள் அதிரடி ரத்து.!

புயல் முன்னெச்சரிக்கை.. 2 ரயில்கள் அதிரடி ரத்து.!

Update: 2020-11-23 16:18 GMT

சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரம்- காரைக்கால் இடையே நிவர் புயல் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது பலத்த சேதத்தை விளைவிக்கலாம் என்பதால் மாநில பேரிட மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. அதே போன்று கரையை கடக்கும் மாவட்டமான காஞ்சிபுரம் மற்றும் காரைக்கால் பகுதியில் அனைத்து நடவடிக்கைளையும் அரசு தயார் நிலையில் வைத்துள்ளது.


இந்நிலையில், இந்த புயல் காரணமாக உழவன், சோழன் ஆகிய இரண்டு ரயில்கள் 2 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போன்று மயிலாடுதுறை, மைசூர் ரயில் நாளை, நாளை மறுநாள் திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


மேலும், பேருந்து சேவைகளும் முடங்க வாய்ப்புள்ளது. புயல் காரணமாக பலத்த காற்று வீசக்கூடும். அப்போது சாலைகளில் பயணம் செய்வது ஆபத்தை விளைவிக்கும் என்பதால் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வாய்ப்புள்ளது. பொதுமக்களும் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
 

Similar News