பொங்கல் தொகுப்பு: மிளகுக்கு பதில் பருத்தி கொட்டை, பப்பாளி விதை!

Update: 2022-01-19 13:37 GMT

பொங்கல் பரிசு தொகுப்பில் மிளகுக்கு பதில் பருத்தி கொட்டை, பப்பாளி விதை இருந்தால் பல இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தியது மட்டுமின்றி கீழே கொட்டி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனிடையே குடோன் தர ஆய்வாளரை திமுக அரசு தற்போது பணியிடை நீக்கம் செய்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பரிசு தொகுப்பில் மிளகுக்கு பதில் பருத்தி கொட்டை, பப்பாளி விதை இருந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பொருட்களை சாலையில் கொட்டி வீசி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், பொங்கல் முடிந்த பினனர் நேற்று முன்தினம் முதல் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்போது மிளகுக்கு பதில் பப்பாளி விதை, பருத்திக் கொட்டை இருந்துள்ளது. மேலும், மல்லித்தூர், மிளகாய்தூள் உள்ளிட்ட பொருட்கள் மிகவும் மோசமாகவும் இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரேஷன் கடை முன்பாக பொருட்களை கொட்டி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். கடை விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் திருப்பத்தூர் மாவட்டங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தில் சென்று ஆய்வு நடத்தினர். நல்ல பொருட்கள் வழங்கப்படும் என கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் தங்களது போராட்டங்களை கைவிட்டனர். இதனிடையே திருப்பத்தூர் குடோன் தர ஆய்வாளர் ரவிச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வேலூர் மண்டல மேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது வெறும் கண்துடைப்பு என்று அதிமுக மற்றும் பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source: Daily Thanthi

Image Courtesy: Asian Net Tamil

Tags:    

Similar News