மாணவி தற்கொலை: சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றக்கோரிய வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு!

Update: 2022-01-28 14:23 GMT

தஞ்சையில் உள்ள தூய இருதய கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளியில் மதமாற்றம் அழுத்தம் காரணமாக 17 வயதுடைய மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணம் இந்துக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், சிபிசிஐடி இந்த வழக்கினை விசாரணை நடத்த வேண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் மாணவி தற்கொலை தொடர்பான வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

அப்போது மாணவியின் பெற்றோருக்கு நீதி கிடைக்கின்ற நம்பிக்கை குறைந்து விட்டதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதன் பின்னர் அரசு தரப்பிலான வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் சிபிசிஐடிக்கு மாற்றக்கோரிய வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

Source,Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News