புதுக்கோட்டை: ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

புதுக்கோட்டையில் ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்தக்கோரி கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-11-16 06:51 GMT

புதுக்கோட்டையில் ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்தக்கோரி கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் கடந்த செமஸ்டர்கள் அனைத்து தேர்வுகளும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. அதே போன்று தற்போதும் ஆன்லைன் வாயிலாகவே நடத்த வேண்டும் என்று மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

அதன்படி நேற்று (நவம்பர் 15) மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் இன்று காலை புதுக்கோட்டையில் ஆட்சியர் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேரடியாக கல்லூரிக்கு வந்து தேர்வு எழுதுவது கடினமாக இருப்பதால்தான் போராட்டம் நடத்துவதாக மாணவர்கள் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்கள் கோஷங்கள் எழுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News