ஆசிரியரை வகுப்பறையில் அடிக்க பாய்ந்த மாணவன் - ஒழுக்கம் என்றால் என்ன என தெரியாமல் வளருகிறதா மாணவ சமுதாயம்?

Update: 2022-04-21 13:26 GMT

வகுப்பில் ரெக்கார்டு நோட்டு எங்கே என்று கேட்ட ஆசிரியரை மாணவன் ஆபாச வார்த்தைகளால் திட்டியது மட்டுமின்றி கடுமையாக தாக்கவும் முயற்சி செய்த சம்பவம் திருப்பத்தூரில் நடைபெற்றுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அங்கு தாவரவியல் ஆசிரியராகப் சஞ்சய் பணியாற்றி வருகிறார். நேற்று வகுப்பில் மாணவர்களிடம் ரெக்கார்டு நோட்டு சமர்ப்பிக்க கேட்டுள்ளார். அதன்படி பல்வேறு மாணவர்கள் ஆசிரியரிடம் ரெக்கார்டு நோட்டை கொடுத்தனர்.

ஆனால் அதில் சில மாணவர்கள் மட்டும் கொடுக்காமல் அமைதியாக இருந்தனர். இதனால் ஆசிரியர் எங்கே ரெக்கார்டு நோட்டு என்று கேட்டுள்ளார். அப்போது சில மாணவர்கள் ஆசிரியரை தகாத வார்த்தையால் பேசினர். 2 பேர் மட்டும் ஆசிரியரை அடிப்பது போன்று அருகில் சென்று ஆக்சன் செய்தனர். மேலும் மிரட்டல் விடுத்தனர். இதனை அங்கிருந்த யாரோ செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். இது பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவர்களின் செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். அந்த வீடியோவில் ஆசிரியரை திட்டுவது ரெக்கார்டு செய்யப்பட்டிருந்தது. இது பற்றி மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வேலன் விசாரணை நடத்தினார். இந்நிலையில், வகுப்பறையில் ஆசிரியரை மிரட்டிய அரசு பள்ளி மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பள்ளியில் கோட்டாச்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆய்வு செய்து சஸ்பெண்ட் நடவடிக்கையை எடுத்தாக கூறப்படுகிறது.

Source,Image Courtesy Maalaimalar

:

Tags:    

Similar News