தமிழக டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு இன்று பதவி ஏற்கிறார்.!
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருப்பவர் திரிபாதி. அவரது பதவிகாலம் இன்றுடன் முடிவடைகிறது. அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருப்பவர் திரிபாதி. அவரது பதவிகாலம் இன்றுடன் முடிவடைகிறது. அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
இதனையொட்டி தமிழகத்தின் புதிய டிஜிபியாக டாக்டர் சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (புதன்கிழமை) பகல் 12 மணி அளவில் சைலேந்திரபாபு டிஜிபியாக பதவி ஏற்கிறார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு திரிபாதி விடைபெறுகிறார்.