மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இன்று சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிப்பு.!
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகின்ற 24ம் தேதி வரை 3 நாட்கள் நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. அப்போது முதலில் தமிழில் வணக்கம் என்று பேசினார். அதன் பின்னர் எளிமையான வாழ்க்கை வாழுங்கள். அது ஊழலை முற்றிலும் அகற்றிவிடும். இது எனது செய்தி. மேலும், தமிழ் இனிமையான மொழி என்றார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகின்ற 24ம் தேதி வரை 3 நாட்கள் நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் 2வது நாளான இன்று மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.