இந்த 3 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு.!

வெப்பச்சலனம் காரணமாக 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-06-24 10:22 GMT

வெப்பச்சலனம் காரணமாக 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




 


இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம், தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.


 



மேலும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Similar News