தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
தமிழகத்தில் கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, தேனி, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, தேனி, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், சென்னையில் சில இடங்களில் இன்று லேசான மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதே போன்று தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடியற்காலை வரை கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.